states

img

உ.பி மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 34 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்ட மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 34 பேர் அதிக வெட்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்ட மருத்துவமனியில் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 34 பேர் அதிக வெட்பம் காரணமாக உயிரிழந்ததாக, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் தெரிவித்துள்ளார். பல்லியா மாவட்ட மருத்துவமனையில், கடந்த ஜூன் 15-ஆம் தேது 23 பேரும், ஜூன் 16-ஆம் தேதி 11 பேரும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.